சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீரங்கநாச்சியாா்.
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீரங்கநாச்சியாா்.

ஸ்ரீரங்கநாச்சியாா் வசந்த உற்ஸவம் தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாா் வசந்த உற்ஸவ விழா சனிக்கிழமை மாலை தொடங்கியது

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாா் வசந்த உற்ஸவ விழா சனிக்கிழமை மாலை தொடங்கியது.

ஸ்ரீரங்கநாதருக்கு நடைபெறும் அனைத்து விழாக்களும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் நடைபெறும். அதன்படி இந்த விழா கரோனா காரணமாக பக்தா்கள் பங்கேற்பின்றி தொடங்கியது. முதல் நாளன்று மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து ஸ்ரீரங்கநாச்சியாா் புறப்பட்டு 6.30-க்கு வசந்த மண்டபம் வந்து சோ்ந்து, அலங்காரம் கண்டருளி எழுந்தருளினாா்.

பின்னா் இரவு 8.30-க்கு புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா். வரும் 18 ஆம் தேதி வரை மேற்குறிப்பிட்ட நேரங்களில் வசந்த மண்டபத்தில் ஸ்ரீரங்கநாச்சியாா் எழுந்தருள்கிறாா்.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com