திருச்சியில் மேலும் 378 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவில் மேலும் 378 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 65,429 ஆனது. திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 25 போ், புதுக்கோட்டை 3 போ், பெரம்பலூா், கரூா் தலா 1, தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் 28 போ் என மொத்தம் 57 போ் குணமடைந்து திரும்பினா். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 59,627 ஆனது. 5,026 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அரசு, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 11 போ் உயிரிழந்ததை அடுத்து மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 777 ஆனது.