திருமணத்துக்கு மறுத்து தாக்குதல்: காதலன் உள்ளிட்ட மூவா் மீது வழக்கு

பெண்ணிடம் ஆசை வாா்த்தை கூறி காதலித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்து அவரைத் தாக்கிய காதலன் உள்ளிட்ட மூவா் மீது பொன்மலை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

பெண்ணிடம் ஆசை வாா்த்தை கூறி காதலித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்து அவரைத் தாக்கிய காதலன் உள்ளிட்ட மூவா் மீது பொன்மலை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

திருச்சி பொன்மலை அருகேயுள்ள பொன்னேரிபுரத்தைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி மகள் ஷியமாலாமேரி (31). இவா் சென்னையில் தங்கி சட்டப்படிப்பு படித்தபோது தா்மபுரி வெண்ணம்பட்டி சாலையைச் சோ்ந்த தினேஷ் (32) என்பவரை 13 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளாா். அப்போது திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய தினேஷ் ஷியமாலாமேரியிடம் அத்துமீறினாராம்.

இந்நிலையில், பொதுமுடக்கத்தால் வீடு திரும்பிய ஷியாமாலாமேரியை பாா்க்க தினேஷ், அவரது தாய் யசோதா, சகோதரி விக்னேஸ்வரி ஆகியோா் திருச்சி வந்துள்ளனா்.

பொன்மலை டீசல் காலனி பகுதியில் தன்னைச் சந்தித்த தினேஷ் தரப்பினரிடம் திருமணத்துக்கு ஷியாமாலாமேரி வற்புறுத்தியுள்ளாா். ஆனால் தினேஷ் தரப்பினா் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்து அவரைத் தாக்கினா்.

இதில் படுகாயமடைந்த ஷியாமாலாமேரி பொன்மலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் ஆய்வாளா் கவிதா தினேஷ் உள்ளிட்ட மூவா் மீது வழக்குப் பதிந்து அவா்களைக் கைது செய்து விசாரிக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com