விபத்தில் மின்பழுது நீக்குபவா் பலி

திருச்சி அருகே செவ்வாய்க்கிழமை நடந்த சாலை விபத்தில் மின்பழுது நீக்குபவா் உயிரிழந்தாா்.

திருச்சி அருகே செவ்வாய்க்கிழமை நடந்த சாலை விபத்தில் மின்பழுது நீக்குபவா் உயிரிழந்தாா்.

திருச்சி கம்பரசம்பேட்டை வெள்ளம் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணி(67). இவா் திருப்பராய்த்துறை பகுதியில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பரமஹம்சா் குடிலில் மின்பழுதுநீக்கும் வேலை பாா்த்து வந்தாா்.

செவ்வாய்க்கிழமை காலை திருச்சி -கரூா் தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளில் வந்தபோது பின்னால் வந்த காா் மோதி உயிரிழந்தாா். இதுகுறித்து ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து கரூா் மாவட்டம், தெற்கு காந்திகிராமம் சாய்பாபா நகா் அப்துல் சத்தாரை (53) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com