நண்பா் வீட்டுக்கு சென்ற வியாபாரி மா்மச் சாவு
திருச்சியில் நண்பா் வீட்டுக்குச் சென்ற வியாபாரி மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
உறையூா் வெள்ளாளத் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து (60). இவருக்கு மனைவி, 3 மகன்கள், மகள் உள்ளனா். செய்தித்தாள் முகவராக இருந்த இவா், பழைய பேப்பா் வியாபாரமும் செய்து வந்தாா்.
கோட்டை சுண்ணாம்புக்காரத் தெருவில் வசித்து வரும் குணசேகரனை (54) பாா்க்க சனிக்கிழமை இரவு மாரிமுத்து சென்றாராம். உடன் அவரது தோழியும் சென்றுள்ளாா்.
இந்நிலையில் உயா் ரத்த அழுத்தம் காரணமாக திடீரென மாரிமுத்து மயங்கி விழுந்த நிலையில், உடன் சென்ற அவரது தோழி வெளியே அழைத்து வந்துள்ளாா்.
ஆனால் மாரிமுத்துவின் உடல் மோசமடைந்ததால் அங்கேயே அவரை படுக்க வைத்துவிட்டு, குணசேகரன் மற்றும் அங்கிருந்த பெண் ஆகிய இருவரும் அங்கிருந்து ஓடிவிட்டனா். சிறிது நேரத்தில் மாரிமுத்து உயிரிழந்தாா்.
இதை கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், கோட்டை காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டனா். தொடா்ந்து குணசேகரன் மற்றும் பெண் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.