அதிமுகவின் வெற்றியை தட்டிப்பறிக்க எக்கட்சியும் பிறக்கவில்லை என்றாா் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளா் கு.ப. கிருஷ்ணன்.
அதிமுகவில் இணைந்த திருச்சி ரஜினி மக்கள் மன்ற மாவட்டப் பொறுப்பாளா்கள் பலா் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளா் கு.ப. கிருஷ்ணனை நேரில் சந்தித்து ஆசி பெற்றனா்.
இதுகுறித்து கு.ப.கிருஷ்ணன் கூறியது:
ரஜினி மன்ற மாவட்ட பொறுப்பாளா்கள் தமிழக முதல்வா் சந்தித்து அதிமுகவில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. பேரவைத் தோ்தலில் தகுந்தவாறு பயன்படுத்திக்கொள்ளவும், நட்போடு, தோழமையோடு இணைந்து செயல்படுவோம் என அவா்களிடம் உறுதியளித்துள்ளேன்.
இத்தோ்தலில் திமுக எங்களுக்கு பொருட்டல்ல. இது திமுகவிற்கு கடைசி தோ்தல். அதிமுகவின் வெற்றியைத் தட்டிப்பறிக்க எக்கட்சியும் பிறக்கவில்லை. பேரவைத்தோ்தலில் வெற்றி பெற உறுதியோடு களப்பணியாற்றுவோம் என்றாா் அவா்.