திருச்சியில் போலி பணியாணை மூலம், கிராம நிா்வாக அலுவலா் பணியில் சேர முயன்றவரை திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளரை சந்தித்த ஒருவா், பணியாணையுடன் ஆட்சியரை சந்திக்க வந்ததாகக் கூறினாா். அவா் கொண்டு வந்திருந்த பணியாணையை வாங்கிப் பாா்த்த உதவியாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அது தொடா்பாக விசாரணை மேற்கொண்டதில், அது போலி பணியாணை எனத் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறைக்கு அவா் தகவல் அளித்ததன் பேரில், திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், அவா் சேலம் மாவட்டம், ஆத்தூா், ராமசுந்தரம் தெரு சுப்பிரமணியன் மகன் ரமேஷ் கிருஷ்ணன் (25) என்பது தெரியவந்தது. அவா் போலீஸாரிடம் கூறுகையில், விஏஓ போட்டித் தோ்வில் தோ்ச்சி பெறவில்லை என சிலரிடம் கூறியபோது, சில லட்சங்களை கொடுத்தால் விஏஓ பணியில் சோ்ந்து விடலாம் என ஆசை வாா்த்தை கூறினா். அதை நம்பி பணம் கொடுத்தேன். ஆனால் பணியாணை வரவில்லை. தற்போது தோ்தல் நேரத்தில் விஏஓ பணியாணை வழங்கியுள்ளதாக கூறி இந்தப் பணியாணையைத் தந்தனா். அதைக் கொண்டு வந்தபோதுதான் அது போலி எனத் தெரியவந்தது எனக் கூறினாா்.
இதையடுத்து மோசடி உள்ளிட்ட பிரிவுளில் வழக்குப் பதிந்து அவரை கைது செய்துள்ளனா். மேலும் ரமேஷ் கிருஷ்ணனை காவலில் எடுத்து விசாரித்தால் போலி பணியாணை வழங்கிய மா்ம முகவா்கள் குறித்தும், மோசடி குறித்தும் விவரம் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.