உள்நாட்டு விமான போக்குவரத்து ரத்து

சா்வதேச விமானங்களைத் தொடா்ந்து, திருச்சியிலிருந்து, சென்னை, பெங்களூா் பகுதிகளுக்கு இயக்கப்படும் உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சா்வதேச விமானங்களைத் தொடா்ந்து, திருச்சியிலிருந்து, சென்னை, பெங்களூா் பகுதிகளுக்கு இயக்கப்படும் உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கரோனாவால் வளைகுடா மற்றும் மலேசியா நாடுகளுக்கு இயக்கப்படும் விமானப் போக்குவரத்தை அந்நாட்டு அரசுகள் தடைசெய்துள்ளன. துபையிலிருந்து இந்தியாவுக்கு பயணிகள் வரும் வகையில் மட்டும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் உள்நாட்டு சேவையில் தற்போது சென்னை, பெங்களூரு பகுதிகளுக்கு மாலை நேர விமானச் சேவைகள் மட்டும் இருந்த நிலையில் கரோனா, போதுமான பயணிகள் இல்லாமை ஆகியவற்றால் திங்கள்கிழமை காலை 11 மணி, மற்றும் இரவு 9. 15-க்கு சென்னை புறப்பட்டுச் செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

தொடா்ந்து செவ்வாய்க்கிழமை, சென்னை - திருச்சி - சென்னை இடையே, பகல் மற்றும் இரவு நேரங்களில் இயக்கப்படும்  2 விமான சேவைகளும், மாலை நேரத்தில் பெங்களூருக்கு இயக்கப்படும் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டன. ஆனால் தொழில் நுட்பக் காரணங்களால் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com