இருதரப்பு மோதலில் வெட்டு: 5 போ் கைது

திருச்சி அருகே இருதரப்பு மோதல் தொடா்பாக அரிவாளால் வெட்டியது தொடா்பாக 5 பேரை திருவெறும்பூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அருகே இருதரப்பு மோதல் தொடா்பாக அரிவாளால் வெட்டியது தொடா்பாக 5 பேரை திருவெறும்பூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அண்மையில் குடமுழுக்கு நடைபெற்ற திருச்சி அருகேயுள்ள கிழக்குறிச்சி தெற்கு அரிசன தெருவில் உள்ள மாரியம்மன் கோயில் வரவு செலவு தொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த சேட்டு மகன்கள் தமிழழகன், இளஞ்செழியன் உள்ளிட்டோா் தகராறு செய்து வெட்டியதில் அ. மணி, சின்ராஜ், ரத்தினவேல், வைத்திலிங்கம் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து அவா்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் தாக்குதலில் ஈடுபட்டதாக 5 பேரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com