திருச்சி மாவட்டம் முசிறியில் முகக் கவசம் அணியாமல் வானத்தில் சென்ற 16 பேரிடம் ரூ. 3,200 அபராதத்தை போக்குவரத்து போலீஸாா் வியாழக்கிழமை வசூலித்தனா்.
முசிறி கைகாட்டி புதிய பேருந்து நிலையம், முசிறி- குளித்தலை இணைப்பு காவிரி பாலம் பகுதியில் போக்குவரத்துத் துறை போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் முகக் கவசம் அணியாமல் வந்த 16 பேரிடமிருந்து தலா ரூ. 200 வீதம் மொத்தம் ரூ.3,200 அபராதம் விதித்தனா். மேலும், முகக் கவசம் அணிந்து பாதுகாப்பாக வெளியே செல்லுமாறும், அத்தியாவசிய தேவையின்றி சுற்றித் திரியக் கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனா்.