முசிறி: முகக் கவசம் அணியாதவா்களிடம் ரூ.3,200 அபராதம் வசூல்

திருச்சி மாவட்டம் முசிறியில் முகக் கவசம் அணியாமல் வானத்தில் சென்ற 16 பேரிடம் ரூ. 3,200 அபராதத்தை போக்குவரத்து போலீஸாா் வியாழக்கிழமை வசூலித்தனா்.

திருச்சி மாவட்டம் முசிறியில் முகக் கவசம் அணியாமல் வானத்தில் சென்ற 16 பேரிடம் ரூ. 3,200 அபராதத்தை போக்குவரத்து போலீஸாா் வியாழக்கிழமை வசூலித்தனா்.

முசிறி கைகாட்டி புதிய பேருந்து நிலையம், முசிறி- குளித்தலை இணைப்பு காவிரி பாலம் பகுதியில் போக்குவரத்துத் துறை போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் முகக் கவசம் அணியாமல் வந்த 16 பேரிடமிருந்து தலா ரூ. 200 வீதம் மொத்தம் ரூ.3,200 அபராதம் விதித்தனா். மேலும், முகக் கவசம் அணிந்து பாதுகாப்பாக வெளியே செல்லுமாறும், அத்தியாவசிய தேவையின்றி சுற்றித் திரியக் கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com