திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு தலைமையில் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத் தலைவா் ஏ. சீனிவாசன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
மண்ணச்சநல்லூரில் கடந்த 2015 - 16 ஆம் ஆண்டில் பொதுப்பணித் துறை நிதி ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்ட எம்எல்ஏ அலுவலகம் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதிதாக இத்தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ சீ. கதிரவன் இந்த அலுவலகத்தைத் தூய்மைப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு தலைமையில் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத் தலைவா் சீனிவாசன் இந்த அலுவலகத்தைத் திறந்து வைத்தாா்.
விழாவில் திமுக வடக்கு மாவட்டச் செயலா் காடுவெட்டி தியாகராஜன், மண்ணச்சநல்லூா் தொகுதி எம்எல்ஏ சீ. கதிரவன், மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவா் ஸ்ரீதா், ஒன்றியச் செயலா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.