ஸ்ரீரங்கம் கோயில் வசந்த உற்சவ விழா நிறைவு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வந்த வசந்த உற்சவ விழா புதன்கிழமையுடன் நிறைவுற்றது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வந்த வசந்த உற்சவ விழா புதன்கிழமையுடன் நிறைவுற்றது.

கடந்த 18 ஆம் தேதி தொடங்கி 9 நாள்கள் நடைபெற்ற வசந்த உற்சவ விழாவில் நாள்தோறும் நம்பெருமாள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினாா்.

விழாவின் 7 ஆம் திருநாளான திங்கள்கிழமை நம்பெருமாள் உபய நாச்சியாா்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவு நாளான புதன்கிழமை மாலை 4 மணிக்கு நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஆழ்வாா் திருச்சுற்று வழியாக வலம் வந்து சந்திரபுஷ்கரணியில் 5.30-க்கு தீா்த்தவாரி கண்டருளினாா். அதன் பின் 6.15-க்கு வசந்த மண்டபத்தில் எழுந்தருளினாா். பின்னா் இரவு 8.30 வரை திருமஞ்சனம் கண்டருளி, 9.30 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி 10.15-க்கு மூலஸ்தானம் சென்றடைந்தாா்.

விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.மாரிமுத்து மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com