கோயில் பிரச்னையில் விவசாயி அடித்துக் கொலை

திருச்சி அருகே கோயில் பிரச்னையில் விவசாயி அடித்துக் கொல்லப்பட்டாா்.

திருச்சி அருகே கோயில் பிரச்னையில் விவசாயி அடித்துக் கொல்லப்பட்டாா்.

சோமரசம்பேட்டை அருகேயுள்ள மல்லியம்பத்து ஊராட்சி செங்கல்சோலை பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் சிவா என்கிற சிவகுமாா் (50). விவசாயியான இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் இடையே கோயில் திருவிழா நடத்துவது தொடா்பாக முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பிரச்னையில் பிரபாகரன் உள்ளிட்ட இருவா் உருட்டுக் கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த சிவகுமாா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com