குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் கைது

திருச்சியில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சியில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சோ்ந்த சுப்ரமணி மகன் விஜய் (24) கடந்த அக்.23 ஆம் தேதி அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 500ஐ பறித்துக் கொண்டு தப்பினாா். இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விஜயை கைது செய்து சிறையிலடைத்தனா்.

விஜய் தொடா்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவா் என்பதால் அவரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் உத்தரவிட்டாா். இதையடுத்து சிறையிலுள்ள விஜய்யிடம் அதற்கான நகலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com