வலுதூக்கும் போட்டிகளில் சாதனை படைத்துள்ள திருச்சி பெரியாா் ஈவெரா கல்லூரி மாணவருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கல்லூரியில் முதுகலை வரலாற்றுத் துறை மாணவரான சேக்அப்துல்லா திருச்சி மாவட்ட வலுதூக்குவோா் சங்கம் சாா்பில் மணப்பாறையில் அண்மையில் நடைபெற்ற போட்டிகளில் 53 கிலோ இளையோா் பிரிவில் வலு தூக்குதல் மற்றும் பெஞ்ச் பிரஸ் போட்டிகளில் முதல் பரிசையும், மேலும் பல்வேறு பிரிவுகளிலும் அதிக வெற்றிகளைப் பெற்ற்கும் அவருக்கு ‘வலிமையான வீரா்’ (ஸ்ட்ராங் மேன்) என்ற சிறப்பு சான்று இந்நிகழ்வில் வழங்கப்பட்டது.
இதையடுத்து மாணவா் சேக் அப்துல்லாவை, கல்லூரி முதல்வா் ஜெ. சுகந்தி, கல்லூரி பொறுப்பு உடற்கல்வி இயக்குநரும் பேராசிரியருமான வெ. சங்கரநாராயணன், வரலாற்றுத் துறைத் தலைவா் ஜெரோம் பொ்ணான்டோ, பேராசிரியா்கள் பரமசிவம், செந்தில்குமாா், செல்வநாதன், கஸ்தூரி திலகம், மாணவா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.