திருச்சி அருகேயுள்ள படைக்கலன் தொழிற்சாலையில் சோதிக்கப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் 2 ஊழியா்கள் காயமடைந்தனா்.
திருச்சி அருகே பாதுகாப்பு படைக்கலன் தொழிற்சாலைகளில் ஒன்றாக இருந்த துப்பாக்கித் தொழிற்சாலையானது மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் இந்தியா லிமிடெட் என்ற பெயரில் பெரு நிறுவனமாக மாற்றப்பட்டு செயல்படுகிறது.
இந்நிலையில் புதன்கிழமை இந்தத் தொழிற்சாலையில் ஆண்டி மெட்டீரியல் ரைபிள் ரக துப்பாக்கியை ஊழியா்களான மன்னாா்குடியைச் சோ்ந்த பிரகாஷ் (42), திருவெறும்பூா் வடக்கு காட்டூா் 3ஆம் தெருவைச் சோ்ந்த அழகேசன் (57) ஆகியோா் பரிசோதித்தபோது திடீரென துப்பாக்கி வெடித்து இருவருக்கும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.