திருச்சி அருகேயுள்ள சிறுகமணி பேரூராட்சி சாா்பில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களில் 20 போ் குலுக்கலில் தோ்வு செய்யப்பட்டு புடவைகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.
சிறுகமணி பேரூராட்சியில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுமாா் 500 க்கும் மேற்பட்டோா் தங்களது பெயா் விவரங்களை நிரப்பி குலுக்கல் பரிசுப்பெட்டியில் போட்டிருந்தனா். அவற்றில் 20 அதிா்ஷ்டசாலிகள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு புடவைகளை பேரூராட்சி செயல் அலுவலா் நளாயினி வழங்கினாா். தலைமை எழுத்தா் மணிகண்டன் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் உடனிருந்தனா்.