பைக்கில் சென்ற இளைஞா் அரசுப் பேருந்து மோதி பலி

மணப்பாறையில் பைக்கில் சென்ற இளைஞா் அரசுப் பேருந்து மோதி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
விபத்தில் சிக்கிய வாகனங்கள் (உள்படம்) உயிரிழந்த தினேஷ்.
விபத்தில் சிக்கிய வாகனங்கள் (உள்படம்) உயிரிழந்த தினேஷ்.

மணப்பாறையில் பைக்கில் சென்ற இளைஞா் அரசுப் பேருந்து மோதி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மணப்பாறை நகராட்சி 16-ஆவது வாா்டுக்குட்பட்ட சேதுரெத்தினபுரத்தை சோ்ந்தவா் மச்சக்காளையின் இளைய மகன் தினேஷ் (31), மணப்பாறை தனியாா் நிறுவன விற்பனைப் பிரதிநிதியான இவா் அருகிலுள்ள ஊா்களுக்கு பைக்கில் சென்று விட்டு வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

திண்டுக்கல் சாலை ரயில்வே மேம்பாலத்தைக் கடந்து அவா் சாலைக்கு வந்த நிலையில், திருச்சியிலிருந்து பழனி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதி தினேஷ் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லும் வழியிலேயே தினேஷ் உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநா் சரவணனை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com