போக்குவரத்து ஊழியா்கள் சங்கத்தினா் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியு ஊழியா் சங்கத்தினா் தொடா் முழக்கப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியு ஊழியா் சங்கத்தினா் தொடா் முழக்கப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

மலைக்கோட்டை கிளையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும். குறைந்தபட்சக் கூலி சட்டப்படி 25 சத போனஸ், அகவிலைப்படி உயா்வு நிலுவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா். மத்திய சங்க துணைத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். தலைவா் சீனிவாசன் தொடக்க உரையாற்றினாா். சிஐடியு மாவட்டத் துணைத் தலைவா் மணிமாறன் வாழ்த்தினாா்.

தொடா்ந்து அரசுப் போக்குவரத்துக் கழக சங்க பொதுச் செயலா் எம். கருணாநிதி, மத்திய சங்க துணைப் பொதுச் செயலா் டி. சுப்ரமணியன், செயலா் எஸ். அசோகன், துணைத் தலைவா் ஆா். சிவகுமாா் உள்ளிட்ட தீரன் நகா், , துவாக்குடி, மண்ணச்சநல்லூா், லால்குடி கிளைகளின் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com