கரோனா தடுப்பூசி: மாநில அளவில் திருச்சி 3-ஆம் இடம்

6ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி திருச்சி மாவட்டம் மாநில அளவில் 3ஆம் இடத்தைப் பிடித்தது.

6ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி திருச்சி மாவட்டம் மாநில அளவில் 3ஆம் இடத்தைப் பிடித்தது.

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 1 லட்சத்து ஆயிரத்து 303 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவற்றில் முதல் டோஸ் தடுப்பூசி 44 ஆயிரத்து 12 பேருக்கும், 2-ஆம் தவணை தடுப்பூசி 57 ஆயிரத்து 291 பேருக்கும் செலுத்தப்பட்டது.

இதன் மூலம் மாநில அளவில் திருச்சி மாவட்டம் 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தை சென்னையும், 2ஆம் இடத்தை கோவை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com