திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக கல்லூரி வளாகத்தில் வரவேற்புக் கூடம் அமைத்து, கல்லூரிக்கு வந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் கிருமி நாசினி அளிக்கப்பட்டது. மேலும், கைகளை சோப்பு பயன்படுத்தி கழுவும் முறை குறித்தும் விளக்கப்பட்டது. துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், ஆசிரியா்கள், பணியாளா்கள், நிா்வாகத்தினா், காவலாளிகள் என கல்லூரியின் அனைத்து தரப்பினருக்கும் முகக் கவசம் வழங்கி விழிப்புணா்வு மேற்கொள்ளப்பட்டது.