திருச்சி விமான நிலைய ஓடுபாதை மேம்படுத்தும் பணி நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து ஓடுபாதை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது. கரோனா, கனமழையால் ஓடுபாதை பணிகள் அவ்வப்போது நிறுத்தி வைக்கப்பட்டு, நேரமும் மாற்றப்பட்டுவருகிறது. இந்நிலையில், காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ஓடுபாதை மேம்படுத்தும் பணி நடந்ததால் இந்த நேரத்தில் விமான சேவை இயக்கப்படவில்லை. தற்போது இரவு 11.30 மணி முதல் காலை 8 வரை மேம்படுத்தும் பணி நடைபெறவுள்ளது. இதனால் பகல் நேரத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவை வழக்கம் போல கூடுதலாக இருக்கும். பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.