மண்ணச்சநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். கதிரவன் தொகுதிக்குள்பட்ட வாத்தலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களில் புதன்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அங்கிருந்த இளைஞா்களிடம் பேசிய அவா், கிராமங்கள்தோறும் விளையாட்டு பல்நோக்கு விளையாட்டு மைதானம் கட்டி தரப்படும்.இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில் தொழிற்சாலைகள் கட்டப்படும். மருத்துவ முகாம் மற்றும் சமுதாயப் பணிகள் தொடா்ந்து நடந்திட உதயசூரியனுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டாா். அப்போது அங்கு கபடி விளையாடிக் கொண்டிருந்த இளைஞா்களுடன் விளையாடி வாக்கு சேகரித்தாா். கூட்டணி மற்றும் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.