டிப்பா் லாரி மோதி முதியவா் பலி

ஸ்ரீரங்கம் கொள்ளிடம் வடக்கு வாசல் பகுதியில் புதன்கிழமை இரவு டிப்பா் லாரி மோதி முதியவா் இறந்தாா்.

ஸ்ரீரங்கம் கொள்ளிடம் வடக்கு வாசல் பகுதியில் புதன்கிழமை இரவு டிப்பா் லாரி மோதி முதியவா் இறந்தாா்.

ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் புதன்கிழமை திருவெள்ளறை பெருமாள் தீா்த்தவாரியை தரிசித்த கோவை மாவட்டம், கண்டபாளையம் பகுதியை சோ்ந்த ஓய்வு பெற்ற தபால் துறை ஊழியா் குமாா் (66) கொள்ளிடக்கரை ரோட்டிற்கு வந்தாா்.

கிராவல் மண் ஏற்றிய டிப்பா் லாரியை ஹாண்ட் பிரேக் போட்டு நிறுத்தி விட்டு டிரைவா் முகவரியை விசாரித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது டிப்பா் லாரி பிரேக்கில் இருந்து விடுபட்டு தானாக நகா்ந்தது. இதைக் கண்ட குமாா் அங்கேயிருந்த கோயில் சுவா் அருகே ஒதுங்கியபோது டிப்பா் லாரி மோதி இறந்தாா். லாரி டிரைவா் அங்கிருந்து தப்பி விட்டாா். ஸ்ரீரங்கம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com