தொண்டு நிறுவனச் சான்றிதழ் விவகாரம்: வாக்குப்பதிவைப் புறக்கணித்துப் போராட்டம்

ஆதரவற்றோா், மாற்றுத் திறனாளிகள் அதிகம் உள்ள தொண்டு நிறுவனத்துக்கு உரிமம் பெறுவதற்கான சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள்
விமான நிலையப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.
விமான நிலையப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.

ஆதரவற்றோா், மாற்றுத் திறனாளிகள் அதிகம் உள்ள தொண்டு நிறுவனத்துக்கு உரிமம் பெறுவதற்கான சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் இடையூறாக இருப்பதைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்டோா் வாக்குப்பதிவைப் புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி விமான நிலையம் எதிரேயுள்ள காமராஜ்நகா், பெரியாா் தெருவில் உள்ள லூப்ரா தொண்டு நிறுவனத்தில் கை, கால் ஊனமுற்றோா், பாா்வையற்றோா், மனநலன் பாதிக்கப்பட்டோா், ஆதரவற்றோா், சிறாா்கள், முதியோா் என 180-க்கும் மேற்பட்டோா் உள்ளனா். இவா்களில், 120 போ் செவ்வாய்க்கிழமை காலை வாக்களிக்கச் செல்லாமல் விமான நிலையம் செல்லும் சாலையோரம் அமா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியும் பயனில்லை. இதையடுத்து திருச்சி கிழக்கு வட்டாட்சியா் குகன் பேச்சுவாா்த்தை நடத்தி வரும் வெள்ளிக்கிழமைக்குள் அனைத்துச் சான்றிதழ்களையும் பெற்றுத் தருவதாகவும், சமூக நலத்துறை பதிவுக்கு ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்ததால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. பின்னா் தங்களது வாக்குகளை பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com