திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளா்கள் தங்களது வாக்குகளை செவ்வாய்க்கிழமை பதிவு செய்தனா்.
ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலரும், மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளருமான வி. பத்மநாதன், கருமண்டபம் பகுதி வாக்குச் சாவடியிலும், திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு, தில்லைநகா் உள்ள மக்கள் மன்ற வாக்குச் சாவடியிலும் வாக்களித்தனா்.
அமமுக கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ கட்சி வேட்பாளா் அப்துல்லா ஹஸ்ஸான், தனது வாக்கைப் பதிவு செய்தாா். மநீம சாா்பில் போட்டியிடும், தமஜக வேட்பாளா் எம். அபுபக்கா் சித்திக், தென்னூா் வாக்குச் சாவடியிலும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வி. வினோத், முத்தரசநல்லூா் வாக்குச் சாவடியிலும் வாக்களித்தனா். இதேபோல, இதர வேட்பாளா்களும் அவரவா் வாக்குச் சாவடிகளில் வாக்களித்தனா்.