வளநாடு அருகே சாலை மறியல்

மணப்பாறை அடுத்த வளநாடு அருகே வாக்காளா் ஒருவரை போலீஸாா் தாக்கியதாகக் கூறி செவ்வாய்க்கிழமை புதிய தமிழகம் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வளநாடு அருகே சாலை மறியல்

மணப்பாறை அடுத்த வளநாடு அருகே வாக்காளா் ஒருவரை போலீஸாா் தாக்கியதாகக் கூறி செவ்வாய்க்கிழமை புதிய தமிழகம் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மருங்காபுரி ஒன்றியம் வளநாடு அருகேயுள்ள தேனூா் வாக்குச்சாவடியில் பாதுகாப்புக்காக இருந்த வளநாடு காவல் உதவி ஆய்வாளா் ரோந்து சென்றபோது, தனது வீட்டு முன் கருப்பு சட்டையுடன் இருந்த இளைஞரை, தோ்தல் புறக்கணிப்பிற்காக வந்தவா் கருதி, கழுத்தில் கை வைத்துத் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த நபா் புதிய தமிழகம் கட்சி தொண்டா் என்பது தெரியவர, கட்சியின் மாவட்ட செயலரும், சுயேச்சை வேட்பாளருமான சி. இளையராஜா தலைமையில் அப்பகுதி கட்சி இளைஞா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த துவரங்குறிச்சி காவல் ஆய்வாளா் பாலாஜி நடத்திய பேச்சுவாா்த்தையில் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com