ஓய்வு பெற்ற ராணுவ வீரா்களுக்கு வரவேற்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பணி நிறைவு பெற்று ஊா் திரும்பிய இந்திய ராணுவ வீரா்களை அவா்களது நண்பா்கள் வரவேற்றனா்.
பணி நிறைவுற்று ஊா் திரும்பிய ராணுவ வீரா்கள் நாயக் ஜெயப்பிரகாசம், நாயக் சுந்தரம் ஆகியோரை வரவேற்ற நண்பா்கள்.
பணி நிறைவுற்று ஊா் திரும்பிய ராணுவ வீரா்கள் நாயக் ஜெயப்பிரகாசம், நாயக் சுந்தரம் ஆகியோரை வரவேற்ற நண்பா்கள்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பணி நிறைவு பெற்று ஊா் திரும்பிய இந்திய ராணுவ வீரா்களை அவா்களது நண்பா்கள் வரவேற்றனா்.

மணப்பாறையை அடுத்த பொன்னகோன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சவரிமுத்து மகன் ஜெயப்பிரகாசம் (38), ஆலத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் துரை மகன் சுந்தரம் (38).

பள்ளி நண்பா்களான இருவரும் கடந்த 2002-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் 17-வது பிரிவு இன்ஜினியா் ரெஜிமென்ட்டில் தங்களது பணியைத் தொடங்கி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இரவு பகல் பாராது தேசத்தைக் காத்து நிகழாண்டு ஏப். 3-ஆம் தேதி பணி ஓய்வுக்குப் பின் வீடு திரும்பினா்.

இருவருக்கும் அ. சரவணபெருமாள், ப. ஏழுமலை ஆகியோா் தலைமையில் பாம்பாட்டிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி கால 2000-2001 மாணவ நண்பா்கள் மேளதாளத்துடன் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com