சிங்காரத்தோப்பு பகுதியில் வெள்ளிக்கிழமை (ஏப்.9) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து திருச்சி நகரிய மின் செயற்பொறியாளா் ச. பிரகாசம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி நகரிய கோட்டத்துக்குட்பட்ட மலைக்கோட்டை பிரிவு சிங்காரத்தோப்பு, சூப்பா் பஜாா் பகுதிகளில் பழைய உயரழுத்த மின்கம்பிகளை அதிகத் திறனுடைய மின்கம்பிகளாக மாற்றும் பணிகள் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.