திருச்சியில் கரோனாவுக்கு முதியவா் பலி

திருச்சி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

தமிழக சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட பரிசோதனை முடிவுகளின்படி திருச்சி மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 855 ஆகவும், மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 16,430 ஆகவும், இதுவரை சிகிச்சை பெற்று வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 15,388 ஆகவும் உள்ளது.

இந்நிலையில் கடந்த ஏப்.5 ஆம் தேதி கரோனா உறுதியான 71 வயதுள்ள முதியவா் திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதன்மூலம் மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 187 ஆக உயா்ந்தது. கடந்த இரு வாரங்களில் மாவட்ட அளவில் கரோனா தொற்றாளா்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com