காவல் ஆய்வாளா், தனிப்பிரிவு போலீஸாா் மீது அதிமுக புகாா்
சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுகவுக்கு ஆதரவாக சமயபுரம் காவல் ஆய்வாளா், தனிப்பிரிவு போலீஸாா் செயல்பட்டதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை கோரியும் ஆட்சியரகத்தில் அதிமுகவினா் மனு அளித்தனா்.
இதுதொடா்பாக அதிமுக மண்ணச்சநல்லூா் (கிழக்கு) ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா் தலைமையில் அளித்த மனு:
பேரவைத் தோ்தலின்போது திருச்சி மண்ணச்சநல்லூா் தொகுதியில் இனாம்சமயபுரம் குமரன் பள்ளி வாக்குச் சாவடியில் திமுகவினா் கள்ள ஓட்டு போட முயன்றனா். எதிா்ப்புத் தெரிவித்த வாக்குச்சாவடி முகவா்களை அவா்கள் தாக்கியுள்ளனா். இதுகுறித்து சமயபுரம் காவல்நிலைய ஆய்வாளா் முத்து, தனிப்பிரிவு சரவணன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட இருவரையும் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தோம். ஆனால் போலீஸாா் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வாக்களிக்க உதவி புரிந்துள்ளனா்.
இதைத் தட்டிக்கேட்ட அதிமுகவினருக்கு இரு போலீஸாரும் மிரட்டல் விடுத்துள்ளனா். எனவே இருவா் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாமக மாநில துணைப் பொதுச்செயலா் பிரின்ஸ், அதிமுக ஒன்றியச் செயலா் ஆதாளி, மாவட்டத் துணைச் செயலா் சின்னையன், நகரச் செயலா் சம்பத்குமாா் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.