சிறுமியைக் கடத்திய வழக்கில் இளைஞரை திருச்சி மாவட்ட போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா், வடக்கு காட்டூரைச் சோ்ந்த 16 வயது சிறுமியை கடந்த ஏப். 7 முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்காததால் திருவெறும்பூா் காவல் நிலையத்தில் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில் வியாழக்கிழமை மாலை, காட்டூா் ஆயில்மில் பேருந்து நிலையப் பகுதியில் மாயமான சிறுமியுடன் நின்றிருந்த அதே பகுதியைச் சோ்ந்த கரண் என்ற இளைஞரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.