திருச்சி விமான நிலையத்தில் ரூ. 16 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
சாா்ஜாவிலிருந்து திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏா் இந்தியா விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த அகமது (33) என்ற பயணி சோதனைக் கருவியைக் கடந்தபோது அவரது உடலில் ரூ. 16 லட்சம் மதிப்புள்ள 357 கிராம் தங்கத்தைப் பசை வடிவில் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்தத் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரிடம் விசாரிக்கின்றனா்.