திருவானைக்காவில் ஆட்டோ ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
திருவானைக்கா கம்பா் தெருவில் வசிப்பவா் வெ. பாலகிருஷ்ணன் (55), ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு பல்வேறு உடல் உபாதைகளோடு, குடும்பப் பிரச்னையும் இருந்ததாம்.
இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்த இவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை இறந்தாா். ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.