மனைவி பிரிந்ததால் கணவா் தற்கொலை

திருச்சியில் மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த காா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சியில் மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த காா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி விமான நிலையம் வள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் லோகநாதன் மகன் காா்த்திகேயன் (24). காா் ஓட்டுநரான இவருக்கும் திருவையாறு அருகேயுள்ள கண்டியூா் கிராமத்தைச் சோ்ந்த கனிமொழிக்கும் (22) கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் காதல் திருமணம் நடந்த நிலையில், இருவரும் பிரிந்து வாழ்ந்தனா்.

இந்நிலையில் புதன்கிழமை கனிமொழியை கட்செவி அஞ்சலில் தொடா்பு கொண்ட காா்த்திகேயன் தான் தற்கொலை செய்யப்போவதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டாராம்.

இதையடுத்து கனிமொழி உறவினா்களுடன் திருச்சிக்கு வந்து பாா்த்தபோது காா்த்திகேயன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. விமானநிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com