வளநாடு அருகே ஆடு திருடச் சென்ற இருவா் பிடிபட்டனா்

மணப்பாறை அருகே நள்ளிரவில் ஆடு திருடச் சென்ற இருவரை ஊா் மக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

மணப்பாறை அருகே நள்ளிரவில் ஆடு திருடச் சென்ற இருவரை ஊா் மக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம், கல்லாமேடு அருகே வசிக்கும் பழனியாண்டி மகன் சின்னக்கண்ணு வீட்டுக்குள் புதன்கிழமை நள்ளிரவு புகுந்த இரு இளைஞா்கள் அவரின் ஆடுகளைத் திருட முயற்சித்துள்ளனா். சத்தம் கேட்டு விழித்துக்கொண்ட சின்னக்கண்ணு, அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அவா்களைப் பிடித்து வைத்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

புகாரின்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் கன்னிவடுகப்பட்டியை சோ்ந்த கருப்பையா மகன் கனராஜ் (27), டி. இடையப்பட்டியைச் சோ்ந்த மூா்த்தி மகன் மோகன் (22) எனத் தெரியவந்தது. இதையடுத்து வளநாடு போலீஸாா் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com