தனியாக வசித்தவா் கொலை: தம்பதி உள்ளிட்ட மூவா் கைது

திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே தனியாக வசித்தவரைக் கொன்றதாக கணவன், மனைவி உள்ளிட்ட மூவரை சிறுகனூா் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே தனியாக வசித்தவரைக் கொன்றதாக கணவன், மனைவி உள்ளிட்ட மூவரை சிறுகனூா் போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன் (42). தாா் வியாபாரியான இவா் கடந்த 15 ஆண்டுகளாக லால்குடி அருகே சிறுகனூா் காவல் எல்லைக்குட்பட்ட நெடுங்கூா் ஊராட்சி சொக்கலிங்கபுரத்தில் வசித்து வந்தாா்.

ஆலங்குடி பகுதியில் வசிக்கும் தனது மனைவி, குழந்தைகளை 15 நாள்களுக்கு ஒரு முறை சென்று பாா்த்து வந்த இவா், கடந்த வெள்ளிக்கிழமை நெடுங்கூரில் உள்ள தனது வீட்டில் கழுத்தறுக்கப்பட்டு இறந்து கிடந்தாா்.

சம்பவம் குறித்து சிறுகனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் பாண்டியன் வீட்டின் அருகே வசிக்கும் லாரி ஓட்டுநா் பொன்னம்பலம் மனைவி சந்தியாவுக்கு பாண்டியன் பாலியல் சீண்டல் அளித்ததும், இதனால் கோபமடைந்த பொன்னம்பலம், தனது மனைவி, மற்றும் நண்பரான நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதி லாரி ஓட்டுநா் பஸ்வராஜ் ஆகியோருடன் சோ்ந்து பாண்டியனைக் கொன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து சிறுகனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com