திருமணமாகாத விரக்தியில் இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி மாவட்டம், வடக்கு சேதுராப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சண்முகராஜ் (24). இவருக்கு உள்ள பாா்வைக் குறைபாட்டால் திருமணம் தடைபட்டு வந்ததாம். இதனால் மனமுடைந்த சண்முகராஜ் கடந்த 2 தினங்களுக்கு முன் விஷம் குடித்தாா்.
இதையடுத்து மணப்பாறை தனியாா் மருத்துவமனையிலும் பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். மணிகண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.