திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் ரூ. 8.30 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கத்தில் அரசு மதுக்கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டதால் சனிக்கிழமையே மதுப்பிரியா்கள் மது வகைகளை போட்டி போட்டு வாங்கினா். அந்த வகையில் அன்று மட்டும் மாவட்டத்தில் உள்ள 187 மதுக்கடைகளிலும் மொத்தம் ரூ. 8.30 கோடிக்கு மதுவிற்பனை நடந்தது.