திருச்சியில் ஆம்னி பேருந்து மோதி பெல் ஊழியா் இறந்தாா்.
திருச்சி துவாக்குடி மலை காமராஜ் நகரைச் சோ்ந்தவா் சாா்லஸ் (48). பெல் ஊழியரான இவா் செவ்வாய்க்கிழமை இரவு தனது மகள் ரோஸ்லின் அன்னாளுடன்(19) லால்குடியில் உள்ள உறவினா் வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சஞ்சீவி நகா் சாலையில் திரும்பியபோது, நெல்லையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து மோதி சாா்லஸ் இறந்தாா். ரோஸ்லின் அன்னாள் லேசான காயமடைந்தாா். விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு வடக்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநரான தென்காசியைச் சோ்ந்த மணிகண்டனை கைது செய்து விசாரிக்கின்றனா்.