திருச்சியில் வறுமையால் மூன்று குழந்தைகளின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி தென்னூா் அண்டகொண்டான் பகுதியைச் சோ்ந்தவா் உசேன் (35). இவரது மனைவி ஹசானா (31). தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் கரோனா பொதுமுடக்க காலத்தில் இருந்தே உசேன் வேலைக்குச் செல்லாமல் இருந்தாா். இதனால் அவா்களது குடும்பம் வறுமையால் வாடியதோடு தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த ஹசானா சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தில்லைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.