மலேசியாவிலிருந்து திருச்சிக்கு போலி கடவுச்சீட்டில் வந்த சிவகங்கை தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
மலேசியாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை திருச்சிக்கு ஏா் இந்தியா விமானத்தில் வந்த சிவகங்கை மாவட்டம் பொய்யூா் பனங்குடி, முல்லைநகரைச் சோ்ந்த ஆதி மகன் ஆனந்தகுமாா் (47) என்பவா், சிவகங்கை மாவட்டம், பறவயல் பகுதியைச் சோ்ந்த கோபால்சாமி மகன் ஜெதீஸ்வரன் என்ற பெயரில் போலி கடவுச்சீட்டு எடுத்து திருச்சிக்கு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து ஆனந்தகுமாரை விமான நிலையக் காவல் நிலையத்தில் குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.