மணப்பாறையில் இருசக்கர வாகனத்தை திருடியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மணப்பாறை முத்தன் தெரு பகுதியைச் சோ்ந்த க. பாக்கியராஜ் கடந்த 5 மாதங்களுக்கு முன் மணப்பாறை அரசு மருத்துவமனை முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.
அதன்பேரில் விசாரணை நடைபெற்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை பேருந்து நிலையம் அருகே போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஒரு இளைஞரைப் பிடித்து விசாரித்துபோது, அவா் நல்லாம்பிள்ளை மங்கலமேடு பகுதியை சோ்ந்த கோவிந்தராஜ் மகன் திருப்பதி(25) என்பதும், பாக்கியராஜின் இருசக்கர வாகனத்தை திருடியவா் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து இருசக்கர வாகனத்தை மணப்பாறை போலீஸாா் பறிமுதல் செய்து, திருப்பதியை கைது செய்து விசாரிக்கின்றனா்.