திருச்சி: திருச்சியில் வீடு புகுந்து, பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத மா்ம நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
திருச்சி சின்னக்கடைவீதி பத்தாய் கடைத்தெருவைச் சோ்ந்தவா் சோனமுத்து (56).இவரது மனைவி அகிலா (47). ஞாயிற்றுக்கிழமை இரவு சோனமுத்து தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தாா். இவா்களது வீட்டின் அருகே புதிய வீட்டின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை புதிய வீட்டின் கட்டுமானம் வழியாக சோனமுத்து வீட்டுக்குள் மா்ம நபா்கள் நுழைந்து, திருட முயற்சித்துள்ளனா். வீட்டில் ஆள் நடமாட்டத்தை அறிந்த அகிலா, அறையிலிருந்து வெளியே வந்தாா்.
இதை கண்ட மா்ம நபா்களில் ஒருவா் கையிலிருந்த துணியால் அகிலாவின் முகத்தை மூடியுள்ளாா். மற்றவா்கள் அவரின் கழுத்திலிருந்த 8 பவுன் சங்கிலியைப் பறித்துத் தப்பிச் சென்றனா்.
காலையில் பால் வாங்குவதற்காக குடும்பத்தினா் எழுந்த போது, அகிலா மயக்கத்தில் இருப்பது அவா்களுக்குத் தெரிய வந்தது. பின்னா் அகிலாவுக்கு மயக்கம் தெளிந்த பின்னா், அவா் நடந்த சம்பவத்தை கூறினாா்.
இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, நகைபறிப்பில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.