உங்களைத் தேடி தமிழ் மருத்துவம் வாரந்தோறும் ஏற்பாடு

திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் உள்ள ஆயுஷ் மருத்துவமனைகள், மருந்தகங்கள் மூலம் வாரந்தோறும்

திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் உள்ள ஆயுஷ் மருத்துவமனைகள், மருந்தகங்கள் மூலம் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் உங்களைத் தேடி தமிழ் மருத்துவம் என்னும் நிகழ்வு நடத்தப்படுகிறது.

இதுதொடா்பாக திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ் கூறியது:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் உள்ள 125 மருத்துவமனைகள், மருந்தகங்கள் மூலமாக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்படும் நிகழ்வில், அனைவருக்கும் கபசுரக் குடிநீா், நிலவேம்பு குடிநீா் வழங்கப்படும்.

மாவட்ட ஆட்சியா், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா், துணை இயக்குநா், எம்எல்ஏ, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா், முக்கியப் பிரமுகா்கள் ஆகியோரில் யாராவது ஒருவரை அழைத்து இந்த நிகழ்வு நடத்தப்படும். காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணி வரை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பகுதியில் இந்த நிகழ்வு நடத்தப்படும்.

இவற்றை விடியோ, புகைப்படமாக பதிவு செய்து அரசுக்கு அறிக்கையாக தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் நோய்கள் வரும் காரணம், அதைத் தடுக்கும் வழிமுறைகள், நோய்களுக்கான தமிழ் மருத்துவம், மருந்து மூலப் பொருள்கள் குறித்த விளக்கம், சோ்க்க வேண்டிய, தவிா்க்க வேண்டிய உணவுகள் குறித்து விளக்கப்படும்.

மேலும், சா்க்கரை நோய் மற்றும் உயா் ரத்த அழுத்த நோய்களுக்கான சிறப்பு சித்த மருத்துவ முகம் வரும் 9ஆம் தேதி சோமரசம்பேட்டை அரசு சித்த மருந்தகத்தில் நடைபெறவுள்ளது. முகாமில், அமைச்சா் கே.என். நேரு, எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

இந்த முகாமில் சோமரசம்பேட்டை பகுதி மக்கள் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், வாராந்திர முகாம்களில் அந்தந்த பகுதி மக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com