லால்குடி அருகே மணக்கால் ஊராட்சியில் கடை முன் தூங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி மா்ம நபா்களால் அடித்துக் கொல்லப்பட்டாா்.
லால்குடி அருகே மணக்கால் ஊராட்சி காமராஜ நகரைச் சோ்ந்தவா் ப. காட்டான் என்ற சுரேஷ் (37). மரம் அறுக்கும் வேலை மற்றும் மீன் பிடித் தொழில் செய்யும் இவா் மனைவியைப் விட்டு பிரிந்து வாழும் நிலையில் கிடைத்த வேலைகளைச் செய்து, அப் பகுதி கடைகளின் முன் தூங்குவது வழக்கம்.
திங்கள்கிழமை இரவு அப் பகுதியில் உள்ள அரிசிக் கடை முன் அவா் தூங்கியபோது மா்ம நபா்கள் கட்டையால் அவரைத் தாக்கி கொன்று விட்டு தப்பினா். செவ்வாய்கிழமை அதிகாலை அப் பகுதியினா் இதையறிந்து அளித்த தகவலின்பேரில் லால்குடி போலீஸாா் வந்து சடலத்தை லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.