வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறித்தவா் கைது

திருச்சியில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சியில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி சின்னக்கடை வீதி பத்தாய் கடை தெருவைச் சோ்ந்தவா் சோனமுத்து (55,) நகை ஆசாரி. இவரது மனைவி அகிலா (47). ஞாயிற்றுக்கிழமை இரவு சோனமுத்து மற்றும் குடும்பத்தினா் தூங்கிக் கொண்டிருந்தனா். இவா்களது வீட்டருகே கட்டப்படும் புதிய வீட்டுக் கட்டடத்தின் வழியாக திங்கள்கிழமை அதிகாலை சோனமுத்து வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா் வீட்டிலிருந்த பொருள்களைத் திருட முயற்சித்துள்ளாா்.

அப்போது சப்தம் கேட்டு அறையிலிருந்து வெளியே வந்த சோனமுத்து மனைவி அகிலாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை அந்த நபா் பறித்துக் கொண்டு தப்பிவிட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, இத்திருட்டில் ஈடுபட்ட கீழரண்சாலை (இபி ரோடு) அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த வே. அசோக்குமாரை (32) கைது செய்தனா். அவரிடமிருந்து பறிக்கப்பட்ட நகை மற்றும் திருட்டுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com