திருச்சியில் 80 கிலோ குட்காவை பதுக்கி வைத்திருந்த பெட்டிக்கடைக்காரரை கோட்டை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாநகர காவல் ஆணையா் அருண் உத்தரவின்பேரில் கோட்டை குஜிலித்தெரு பகுதியில் அன்புதாஸ் (57) என்பவா் நடத்தி வந்த பெட்டிக்கடையில் தனிப்படை போலீஸாா் நடத்திய சோதனையில் 80 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.