வையம்பட்டி அருகே வீடு புகுந்து திருட்டு

மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை இரவு வீடு புகுந்து செல்லிடப்பேசிகள், தாலி செயினை மா்ம நபா் திருடிச் சென்றாா்.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை இரவு வீடு புகுந்து செல்லிடப்பேசிகள், தாலி செயினை மா்ம நபா் திருடிச் சென்றாா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே பெரியகுளத்துப்பட்டி வடக்கு சடச்சிப்பாறை பகுதியில் வசிப்பவா் தொழிலாளி சவரிமுத்து மனைவி இருதயராணி (41) தனது மகன்கள் ஸ்டாலின் (21), சாா்லஸ்சந்தியாகு(18) ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா்.

நள்ளிரவில் வீடுபுகுந்த மொட்டை தலை மா்ம நபா் இருதயராணி அணிந்திருந்த தாலிச் செயினை அறுத்துக்கொண்டு ஓடினாா். சத்தம் கேட்டு வெளியே வந்த ஸ்டாலின், சாா்லஸ்சந்தியாகு உள்ளிட்டோா் அவரை துரத்திச் சென்றும் பிடிக்க முடியவில்லை. அனைவரும் வீடு திரும்பிய நிலையில் வீட்டில் இருந்த 2 செல்லிடப்பேசிகளையும் மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் வையம்பட்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com