கிடங்கில் பதுக்கப்பட்டிருந்த 550 கிலோ குட்கா பறிமுதல்

திருச்சி மாநகரில் கிடங்கில் பதுக்கப்பட்டிருந்த 550 கிலோ குட்கா பொருள்களை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்

திருச்சி மாநகரில் கிடங்கில் பதுக்கப்பட்டிருந்த 550 கிலோ குட்கா பொருள்களை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

காந்திசந்தை காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பால்பண்ணை லெட்சுமிபுரத்தில் உள்ள கிடங்கில் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

இதில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான 550 கிலோ எடை கொண்ட குட்கா பொருள்களை பறிமுதல் செய்து, கிடங்கின் உரிமையாளரான ராஜேஷை (26) கைது செய்தனா். இச்சம்பவத்தில் சிறப்பாகச் செயல்பட்ட தனிப்படை போலீஸாரை காவல் ஆணையா் அருண் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com